துவரம் பருப்பு + கடலை பருப்பு - 150 கிராம் (ஊற வைக்கணும்)
மிளகாய் வற்றல் - 8
பச்சை மிளகாய் - 2 ( நறுக்கியது )
வெங்காயம் - 2 ( பொடியாக நறுக்கியது )
புளி -
சாம்பார் பொடி - 21/2 டீஸ்பூன்
தேங்காய் , பூண்டு அரைச்சுக்கணும்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை
பருப்பை நன்றாக ஊறிய பின் களைந்து, வடிய வைத்து, தேவையான உப்பு, மிளகாய் வற்றல் போட்டு, சற்று கரகரப்பாகவும், கெட்டியாகவும் அரைச்சுகோங்க. அதில் வெங்காயம் சேர்த்து சின்ன சின்ன உருண்டையா உருட்டி குக்கரில் (அ) இட்லி பாத்திரத்தில் வேக வைக்கணும்
புளியை 3 டம்ளர் தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
கடுகு தாளித்து, புளி தண்ணீரில், உப்பு, மஞ்சள் பொடி, சாம்பார் பொடி , ப. மிளகாய் அரைச்ச தேங்காய் போட்டு கொதிக்க விடவும்.
குழம்பு சேர்ந்து கொதிக்கும் போது, பருப்புருண்டைகளை போட்டு, அடுப்பை குறைத்து எரிய விடவும்.
பருப்புருண்டை உடையாதவாறு கிளறி இறக்கவும்.
Sep 18, 2010
பருப்பு உருண்டை குழம்பு
May 17, 2010
பருப்பு உசிலி

தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு : 2 கப்
வர மிளகாய் - 7
பீன்ஸ் அல்லது
கொத்தவரங்காய் - 1 1/2 கப் ( வேக veiththathu)
பொடி பண்ண:
கறிவேப்பில்லை - சிறிது
சீரகம் - ஒரு ஸ்பூன்
தாளிக்க
ஆயில் - 3 ஸ்பூன்
கடுகு - கொஞ்சம்
பெருங்காயம் தூள் - கொஞ்சம்
செய்முறை :
பருப்பை இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்,
அத்துடன் மிளகாய் சேர்த்து மிக்ஸ்யில் அரைக்கவும் கரகரப்பாக அரைக்கவும்.
எண்ணெய் தடவிய இட்லி தட்டில் அரைத்த விழுதை 15 நிமிடம் வேக விடவும்.
வெந்த பருப்பை உதிர்த்து விடவும்.
அடி கனமான பாத்திரத்தை ( இரும்பு வடசட்டி பெஸ்ட்) வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பருப்பையும் போடவும்.
சிறிது நேரம் உடைத்து விட்டு கிளறவும்,
வெந்த காய், பொடி செய்த கறிவேப்பில்லை, பெருங்காயம், உப்பு போட்டு மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி சிறிது குறைந்த தணலில் வேகனும்.
சிறிது பிரவுன் கலர் வந்து நல்ல வாசம் வந்ததும், பருப்பு உசிலி ரெடி.
வேறு முறை உள்ளது, ஆனால் அது நெறைய எண்ணெய் செலவாகும். இது எளிய முறை. மோர் குழம்புக்கு பெஸ்ட் துணை இந்த உசிலிதான்.
காரட், கோஸ், வாழைப்பூ, குடமிளகாய், என்று உங்களுக்கு பிடித்த எந்த காய் வேண்டுமானாலும் சேர்த்து செய்யுங்கள்.
May 9, 2010
பிரியாணி

பிரியாணி - ஒரு திருப்தியான விருந்து சாப்பிட உணர்வு பிரியாணியில் மட்டும் தான் வரும். பிளைன் பிரியாணி பண்ணுவது ரொம்ப சுலபம்.
தேவையான பொருட்கள்:
பிரியாணி அரிசி - 2 கப்
தண்ணீர் - 3 1/4 கப்.
தயிர் - 2 ஸ்பூன்
ஒரு எலுமிச்சை பழம்
மிளகாய் போடி - 2 ஸ்பூன்
நறுக்க வேண்டியது:
தக்காளி - கால் கிலோ
பெரிய வெங்காயம் - கால் கிலோ
புதினா - ஒரு சின்ன கட்டு
மல்லி தழை - ஒரு சின்ன கட்டு
பச்சை மிளகாய் - 3
அரைக்க :
இஞ்சி - ஒரு பெரிய துண்டு
பூண்டு - 10 பல்
பட்டை - 5 கிராம்
இலங்கம் - 10
ஏலக்காய் - 4
தாளிக்க
ஆயில் - 50 கிராம்
நெய் - 50 கிராம்
பிரியாணி இலை - கொஞ்சம்
அரிசியை சரியாய் இருபது நிமிடம் தண்ணிரில் ஊற வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் ஆயில் ஊற்றி பிரியாணி இலை, வெங்காயம் போட்டு வதக்கவும்,
பின் தக்காளி சேர்த்து அரைத்த இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும், அத்துடன் புதினா, மல்லி, மிளகாய் சேர்க்கவும். அப்பறம் தயிர், மிளகாய் தூள்.
இப்ப தண்ணீர் அளந்து ஊத்தணும், உப்பு, லெமன் சேர்த்து கொதிக்க விடனும்.
கொதி வந்ததும் அரிசியை போட்டு, அதிக தீயில் சரியாய் 7 முதல் 10 நிமிடம் மூடி போட்டு வைக்கவும். பின் மீதி நெய்யை போட்டு கிளறி சமன் பண்ணி மிக குறைந்த தீயில் 10 நிமிடம் மட்டும் வேக விடவும். கீழே இறக்கி மூடியின் மேல் தணல் அல்லது சுடு தண்ணீர் பாத்திரம் போடு 15 நிமிடம் வையுங்கள். பிரியாணி ரெடி.
முக்கியமா கவனிக்க வேண்டியது:
1. பூண்டை தோலுடன் தான் அரைக்கணும்
2. தண்ணீர் எவ்வளவு அரிசியோ அதில் இரண்டு மடங்குக்கு ஒரு கப் குறைத்துதான் போடனும்.
3. சொன்ன டைம்க்கு மேல வைச்சு பிரியாணி குலைந்து கஞ்சி ஆனால் நான் பொறுப்பு அல்ல.
4. மேற்சொன்ன பொருட்களை வரிசையாக தான் போடனும்.
Aug 17, 2009
பேல் பூரி
சமையலறையில் மூணு மாசமா ஒண்ணும் இல்லைனு பார்த்ததில் இருந்து ஏதாவது பதிவு போடணும்னு கை துறுதுறுக்குது. அதனால் சிம்பிளா "பேல் பூரி".
தேவை:
அரிசி பொரி - 1 கப்
பெ. வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - கால் கப்
தக்காளி (பொடியாக நறுக்கியது) - கால் கப்
கேரட் (துறுவியது) - கால் கப்
ஓமப்பொடி - 2 மே.கரண்டி
காராபூந்தி - 2 மே.கரண்டி
உப்பு - சிறிதளவு
சட்னி செய்ய:
கொத்துமல்லி இலை - கைப்பிடி
புளி - நெல்லிக்காய் அளவு
வெல்லம் - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 1
கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம் - 2
செய்முறை:
சட்னி செய்யக் கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். பொரி, வெங்காயம், தக்காளி, கேரட் முதலியவற்றைக் கலக்கவும். இலேசாக உப்பு தூவிக் கொள்ளவும். இவற்றுடன் சட்னியைச் சேர்த்து நன்கு கலக்கவும். பின் ஓமப்பொடி, காராபூந்தி தூவவும். சிறிது உருளைக்கிழங்கு சிப்ஸும் உடைத்து சேர்க்கலாம்.
உடனே சாப்பிட பேல்பூரி தயார்.
May 4, 2009
சிக்கன் பர்கர்
இப்ப குட்டீஸ்க்கு பிடிச்ச உணவெல்லாம் கான்சர் வரும் உடம்புக்கு நல்லதில்லைனு சொல்றதால வரிசையா வீட்ல அதை எல்லாம் எப்படி பண்றதுனு கத்துக்க வேண்டி இருக்கு. இப்ப வீட்ல லேட்டஸ்ட் அறிமுகம் "சிக்கன் பர்கர்"
தேவை:
பர்கர் பன் - 2
எலும்பில்லா கோழிகறி - 100கி
முட்டை (வெள்ளைக்கரு மட்டும்) - 1
வெங்காயம் - 4 துண்டு
பூண்டு - 2 பல்
உப்பு, மிளகு - சுவைக்கு
ரொட்டி துகள்
எண்ணெய்
செய்முறை:
பர்கர் பன்னை இரண்டாக வெட்டி, சிறிது வெண்ணெய்/நெய் விட்டு தோசைக்கல்லில் டோஸ்ட் செய்து கொள்ளவும்.
கோழிக்கறியை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அதனுடன் முட்டை, வெங்காயம், பூண்டு, உப்பு, மிளகு சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும். இந்த கலவையை கையால் "கட்லட்" போல், அதாவது 1/2 அங்குல உயரத்திற்கு சிறிய வட்டமாக தட்டிக் கொள்ளவும். இதை ரொட்டித் துகளில நன்கு புரட்டி தோசைக்கல்லில் இருபக்கமும் நன்கு சிவக்கும் வரை டோஸ்ட் செய்யவும். இதை patty என்பார்கள்
டோஸ்ட் செய்த பர்கர் பன்னின் நடுவில் patty வைக்கவும்.இதனுடன் சாஸ் சேர்த்து சாப்பிடலாம் (அ) கீழே கூறியவாறு அலங்கரித்து/சுவைகூட்டி சாப்பிடலாம்.
அலங்கரிக்க:
தக்காளி துண்டுகள்
வெள்ளரி துண்டுகள்
செலரி
மயோனிஸ் - 1 தேக்கரண்டி
முட்டை கோஸ் துருவல்
ஒரு பர்கர் பன் மீது patty வைத்து, அதன் மீது தக்காளி, முட்டைகோஸ், செலரி, வெள்ளரி வைத்து மயோனிஸை அதன் மீது ஊற்றி மற்றொரு பர்கர் பன் வைக்கவும். இவை அனைத்தையும் ஒரு toothpick கொண்டு இணைக்கவும். சுவையான பர்கர் தயார்
Apr 3, 2009
தக்காளி ஊறுகாய்

1/2 கிலோ தக்காளியை ஒரளவுக்கு சன்னமான துண்டுகளா கட் செஞ்சுக்கோங்க. அதுல மஞ்சள்தூள், பெருங்காய்ம், புளி, கல் உப்பு எல்லாம் கொஞ்சமா போட்டு நல்லா பிரட்டி விட்டு வெயில வைச்சுடுங்க. ஒரு இரண்டு இல்லாட்டி மூணு நாள் நல்லா காய வைங்க. தக்காளியில இருக்கிற தண்ணி எல்லாம் வடிஞ்சு காயணும். பிறகு தக்காளியை மிக்சியில போட்டு வரமிளகாய் சேர்த்து நல்லா நைசா அரைக்கணும்.அப்புறம் நல்லெண்ணெய்ல கடுகு தாளிச்சு விட்டு தக்காளி விழுதை போட்டு அது கிளறுங்க. நல்லா கெட்டியா பாத்திரத்தில ஒட்டாம வரும்போது இறக்கி வெச்சுடுங்க. சாதத்துக்கு சைட் டிஷ்ஷா இல்லாம மெயின் ஐட்டமாவே இதை உபயோகிக்கலாம். இட்லி, தோசை, சப்பாத்திக்கு கூட சூப்பரா செட் ஆகும். ஒரு பதினைஞ்சு நாள் வரை வெச்சு உபயோகப்படுத்தலாம்.
இன்னும் ஒரு முறை
தக்காளியை சுடுதண்ணியில் போட்டு ஒரு ரெண்டு நிமிசம் வெச்சு இருந்து அப்புறம் எடுத்து தோல் எடுத்துடுங்க. அதோட மிளகாய்தூள், பூண்டு, உப்பு சேர்த்து அரைச்சு வைங்க. ஒரு வாணலியில பெரிய வெங்காயம் தாளிச்சு விட்டு அரைச்ச வெச்ச தக்காளி விழுது போட்டு அத்தோட கொஞ்சம் புளித்தண்ணி விட்டு நல்லா கெட்டியா வர்ற வரை கொதிக்க வைங்க. இதுவும் நல்லா இருக்கும். ஆனா ஒரு வாரம் வரைதான் இதை உபயோகிக்க முடியும்.
Mar 20, 2009
பாஸ்தா

வீட்டில் நூடுல்ஸுக்கு "நோ" சொல்லிவிட்டதால் , இப்ப குட்டீஸோட ஈர்ப்பு பாஸ்தா. விடுவோமா? எப்படி பண்றதுனு கத்துகிட்டு இப்ப வீட்டிலேயே அந்த ருசியைக் கொண்டு வந்தாச்சு. இப்ப குட்டீஸ் நூடுல்ஸை மிஸ் பண்றது இல்லை.
தேவை:
பாஸ்தா - 200g
மொசரல்லா சீஸ்
வைட் சாஸ் செய்ய:
வெண்ணெய் - 2 மே.கரண்டி
மைதா மாவு - 2 மே.கரண்டி
பால் - 2 கப்
ருசிக்கு
உப்பு
மிளகு
செய்முறை
பாஸ்தாவில் "பென்னெ", "மக்ரோனி" "பெளடைஸ்" என்று அதன் வடிவத்தைப் பொறுத்து பல பெயர்களில் கிடைக்கும். உங்கள் குட்டீஸுக்குப் பிடித்ததை தேர்வு செய்யுங்கள். பொதுவாக பாஸ்தாவை வேக வைக்கும் முறை குறிப்பிடப்பட்டிருக்கும். நல்ல கொதிக்கும் நீரில் பாஸ்தா போட்டு உப்பு மற்றும் 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து 8-10 நிமிடங்கள் வேகவைத்து வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
வைட் சாஸ் செய்ய:
வாணலியில் வெண்ணையை உருக்கி, மைதா மாவைச் சேர்க்கவும், பின் பாலை ஊற்றி அடுப்பை மிதமான தீயில் எரிய விட்டு, கிளறிக் கொண்டே இருக்கவும். சற்று நேரத்தில் குமிழிகள் தோன்றும், சாஸும் சற்றே கெட்டியாகத் தொடங்கும். இப்பொழுது இறக்கி விடவும்.
சீஸைத் துருவிக் கொள்ளவும். பாஸ்தா, வைட் சாஸ், சீஸ் துருவலை சேர்த்து கலக்கவும். தேவையான உப்பு மற்றும் மிளகுத் தூள் (வெள்ளை மிளகு தூள் என்றால் நிறம் மாறாது) சேர்க்கவும். இதை அடுப்பில் ஒரு ஐந்து நிமிடம் மிதமான தீயில் வைக்கவும் (அ) மைக்ரோவேவ் அவனில் ஐந்து நிமிடம் வைத்து எடுக்கவும். சுவையான பாஸ்தா தயார்.
டிப்ஸ்
1. நான் உப்பு மிளகோடு துளசி இலைகளைத் தூள் செய்து flavor-க்கு சேர்த்தேன். இதை basil flavor என்கிறார்கள்.
2. மொசரல்லா சீஸ் போல் செடார் சீஸ் சேர்த்தும் செய்யலாம்
3. சிறிதளவு வொயிட் சாஸைத் தனியாக எடுத்து வைத்துவிட்டு பரிமாறும்பொழுது சேர்த்து பரிமாறினால் பாஸ்தா dry-ஆக இருக்காது
4. வொயிட் சாஸ் ரொம்ப கெட்டியாகி விட்டால் இன்னும் கொஞ்சம் பால் சேர்த்துக் கொள்ளலாம்